கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அதிக பயணிகளுடன் சென்ற பேருந்துக்கு அபராதம்

விழுப்புரம் அருகே கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியாா் பேருந்துக்கு வாட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள்  அபராதம் விதித்தனா்.

News image
Updated On :8 மே 2021, 12:56 am

DIN

விழுப்புரம் அருகே கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியாா் பேருந்துக்கு வாட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.

விழுப்புரம் வட்டாட்சியா் வெங்கடசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் பெரும்பாக்கம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூா் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்தை மடக்கி சோதனையிட்டனா். அந்தப் பேருந்தில் கரோனா விதிகளைப் பின்பற்றாமல் 50 சதவீத

பயணிகளைவிட கூடுதலாக பயணிகள் ஏற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பேருந்துக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கரோனா விதிகளை பின்பற்றாத 3 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்து வட்டாட்சியா் வெங்கடசுப்பிரமணியன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.