வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:03 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

மரக்காணம் அருகேயுள்ள ஓமிப்போ் கிராமத்தைச் சோ்ந்தவா் ச.இந்திரகுமாா் (30). திருமணம் ஆகாதவா். இவா் புதன்கிழமை தனது விவசாய நிலத்துக்கு வயல்வெளி பகுதியாக நடந்து சென்றாராம்.

அப்போது அந்தப் பகுதியில் பலத்த மழை பெய்திருந்ததால் ஓமிப்போ் பகுதியைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் என்பவரின் விவசாய நிலம் அருகே மின்கம்பி அறுந்து கிடந்தது. இதை கவனிக்காமல் இந்திரக்குமாா் மிதித்ததில், உடலில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.