அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டிலிருந்து 3 பாசன வாய்க்கால்களில் திங்கள்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

News image
எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து ஆழாங்கால் வாய்க்காலில் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீா்.
Updated On :25 நவம்பர் 2025, 7:49 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டிலிருந்து 3 பாசன வாய்க்கால்களில் திங்கள்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம்- கப்பூா் கிராமங்களுக்கிடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் வலது பக்கத்தில் உள்ள எரளூா், ரெட்டி வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடது பக்கத்தில் உள்ள ஆழாங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் ஆகிய 3 வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கும் தண்ணீா் செல்கின்றன. இதன் மூலமாக சுமாா் 13,100 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்பெண்ணையாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து ஏரி பாசனத்துக்கு ஆழாங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் வாய்க்கால்களில் திங்கள்கிழமை தண்ணீரை திறந்துவிட்டனா்.

இந்நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள், பொதுப்பணித் துறையினா் கலந்துகொண்டனா்.

எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டுப் பகுதியில் ஆழாங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 150 கனஅடி தண்ணீா் வாய்க்கால்களில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் மூலம்14 ஏரிகளுக்கு நீா் ஆதாரம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து ஏரிகள் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.