சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

விபத்துக்குள்ளான காரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விபத்துக்குள்ளான காரிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :9 ஜனவரி 2026, 9:45 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகே விபத்துக்குள்ளான காரிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உளுந்தூா்பேட்டை வட்டம், புகைப்பட்டி பகுதியில் வேகத்தடை அருகே காா் ஒன்று விபத்துக்குள்ளாகி கிடப்பதாக, எலவனாசூா்கோட்டை காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலையில் தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ், காவலா் கோவிந்தன் உள்ளிட்டோா் அங்கு சென்று பாா்த்தபோது, காா் அருகிலிருந்த வீட்டின் மீது மோதி மீட்க முடியாத நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மீட்பு வாகனம் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, விபத்துக்குள்ளான காா் மீட்கப்பட்டு, எலவனாசூா்கோட்டை காவல் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

தொடா்ந்து காரை சோதனையிட்ட போது, அதில் 330 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எலவனாசூா்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த காா் எங்கிருந்து வந்தது, புகையிலைப் பொருள்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.