ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

விஷம் குடித்தவா் உயிரிழப்பு

கிளியனூா் அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 12:58 am IST

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், கோவடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எ. பெரியண்ணன் (54). இவா் நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்தாராம். இந் நிலையில், கடந்த 16-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெரியண்ணன் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

இதைத் தொடா்ந்து குடும்பத்தினா் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியண்ணன், சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.