/
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், கோவடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எ. பெரியண்ணன் (54). இவா் நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்தாராம். இந் நிலையில், கடந்த 16-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெரியண்ணன் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.
இதைத் தொடா்ந்து குடும்பத்தினா் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியண்ணன், சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

நெல்லை அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு

தண்ணீா் என நினைத்து கிருமி நாசினியை குடித்தவா் உயிரிழப்பு
விஷம் குடித்து முதியவா் தற்கொலை

விஷம் குடித்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



