கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மூடிக்கிடக்கும் அவசர சிகிச்சை பிரிவு

சிதம்பரம், மார்ச் 16: சிதம்பரம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் விபத்தில் அடிபட்டு வருபவர்கள் கடலூர் மற்றும

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:37 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், மார்ச் 16: சிதம்பரம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்ட நிலையில் உள்ளது.

இதனால் விபத்தில் அடிபட்டு வருபவர்கள் கடலூர் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். உடனடி சிகிச்சை இல்லாததால் கடலூர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பலர் இறந்துவிடும் நிலை உள்ளது.

÷சிதம்பரம் அரசு மருத்துவமனை 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 200-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் உள்ளனர்.

 இம்மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர். தற்போது மருத்துவமனையில் 12 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் பாதி பேர் மாற்றுப் பணிக்கு சென்று விடுதால் குறிப்பிட்ட 4 டாக்டர்களே தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.

மயக்க மருந்து டாக்டர், எலும்பு முறிவு டாக்டர் ஆகியோர் இல்லாததால் 20.9.2009-ல் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மூடப்பட்ட நிலையில் உள்ளது.

 ஆண் மற்றும் பெண் மருத்துவ உதவியாளர்கள் போதிய அளவில் இல்லை.

தற்போது ஒரு உதவியாளர் மட்டுமே பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

÷வருகிற ஏப்ரல் மாதம் கூடுதல் பணியாளர்கள் மற்றும் டாக்டர்கள் நியமனம்  செய்யப்படவுள்ளனர் என முதன்மை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.