தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

கேரளத்துக்கு ரூ. 5.40 கோடி நிதியுதவி: என்எல்சி இந்தியா நிறுவனம் வழங்கியது

கேரளத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில், ரூ. 5.40 கோடிக்கான காசோலையை அதன் இயக்குநர் ஆர்.விக்ரமன் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம்

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

கேரளத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில், ரூ. 5.40 கோடிக்கான காசோலையை அதன் இயக்குநர் ஆர்.விக்ரமன் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் புதன்கிழமை வழங்கினார்.
 சமீபத்தில் பெய்த பெருமழையால் கேரள மாநிலம் மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்தது. அங்கு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து உதவுமாறு அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து, பல்வேறு மாநில அரசுகள், அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வமுடன் உதவி வருகின்றனர்.
 இந்த நிலையில், என்எல்சி இந்தியா நிறுவன ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன்வந்தனர். அவ்வாறு திரட்டப்பபட்ட நிதி ரூ. 3 கோடியே 39 லட்சத்து 70 ஆயிரத்துடன், என்எல்சி இந்தியா நிறுவனம் தனது பங்களிப்பாக ரூ. 2 கோடியைச் சேர்த்து மொத்தம் ரூ. 5 கோடியே 39 லட்சத்து 70 ஆயிரத்தை கேரளத்துக்கு வழங்கியது.
 இதற்கான காசோலையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் வழங்கினார்.
 அப்போது, தூத்துக்குடி என்டிபிஎல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஷாஜி ஜான், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை தலைமைப் பொது மேலாளர் என்.சதீஷ்பாபு, நிதித் துறைத் தலைமைப் பொது மேலாளர் வி.என்.பாபு உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.