தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

விருத்தாசலம் அருகே 2 கோயில்களில் திருட்டு

விருத்தாசலம் அருகே இரண்டு கோயில்களில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 9:21 am IST

விருத்தாசலம் அருகே இரண்டு கோயில்களில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது.
விருத்தாசலம் அருகே சு.கீணனூரில் மாரியம்மன் கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை இந்தக் கோயிலுக்கு வந்தவர்கள், கோயில் தகவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். கோயிலின் உள்ளேச் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்ததோடு, அம்மன் கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தாலிச் செயினும் திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து கம்மாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மற்றொரு சம்பவம்: இதேபோல, விருத்தாசலம் அருகே கார்மாங்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளனர். அதில், சுமார் ரூ.10 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், அருகிலுள்ள பெருமாள் கோயிலிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.