பொதுத் தேர்வு ஆயத்தக் கூட்டம்
கடலூரில் அரசுப் பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆயத்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


கடலூரில் அரசுப் பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆயத்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 10,11, 12-ஆம் வகுப்புகளுக்கான அரசுப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை கடலூர் மாவட்டத்தில் 99,147 பேர் எழுதுகின்றனர். மேல்நிலைத் தேர்வுகள் 94 தேர்வு மையங்களிலும், எஸ்எஸ்எல்சி தேர்வுகள் 127 மையங்களிலும் நடைபெறுகிறது. தேர்வுப் பணியில் ஈடுபடும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறைக் கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் ஆகியோருக்கான தேர்வு ஆயத்தக் கூட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உமா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஒவ்வொரு பதவியில் உள்ளவர்களின் பணிகள், அவர்கள் அதை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், உயர் அலுவலர்களுக்கு தகவல் அனுப்புதல், தங்களது கட்டுப்பாட்டிலுள்ள அலுவலர்களை ஒழுங்குபடுத்துதல், அவர்களிடமிருந்து தகவல்களை எவ்வாறு பெறுவது ஆகியவை குறித்து விளக்கிப் பேசினார்.
மேலும், வினாத் தாள்கள், விடைத் தாள்களை பாதுகாப்புடன் கொண்டு சென்று தேர்வு மையங்களில் சேர்ப்பதில் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் விளக்கினார்.
கூட்டத்தில், அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...