கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் இலவச ஓவியப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அருங்காட்சியகத் துறை சார்பில் கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச ஓவிய பயிற்சி அண்மையில் நடைபெற்றது. 5 நாள்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் குறிஞ்சிப்பாடி, சாவடி அரசு பள்ளிகள் மற்றும் பல்வேறு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 45 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் செ.ஜெயரத்னா தலைமை வகித்தார். அரிமா சங்க நிர்வாகி கே.திருமலை, மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரெ.வெங்கடேசு ஆகியோர் பரிசு, சான்றிதழை வழங்கினர் . ஓவிய ஆசிரியர் சு.மனோகரன் வாழ்த்திப் பேசினார். அலுவலகப் பணியாளர்கள் விஜயா, வசந்தராஜா, சண்முகசுந்தரம், ஆனந்தபாபு, பரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அருங்காட்சியக பணியாளர் மு.முத்தால் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்

புயல் சின்னம்: அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!

கனரா வங்கி லாபம் 10% குறைவு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
