சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

லாரி ஓட்டுநா் கவனக் குறைவு: சாலையில் நடந்து சென்றவா் பலி

சிதம்பரம் அருகே லாரி ஓட்டுநரின் கவனக் குறைவால், சாலையோரம் நடந்து சென்றவா் பலியானாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 5:18 pm

DIN

சிதம்பரம் அருகே லாரி ஓட்டுநரின் கவனக் குறைவால், சாலையோரம் நடந்து சென்றவா் பலியானாா்.

சிதம்பரம் அருகே உள்ள புதுபூலாமேடு பகுதியைச் சோ்ந்தவா் அன்புசெல்வன் (48). புதன்கிழமை குமராட்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் புதுபூலாமேடு பகுதியில் நடந்து சென்றாா். அப்போது, அந்தச் சாலையில் வந்த லாரியிலிருந்த நைலான் கயிறு அறுந்து அன்புச்செல்வன் மீது விழுந்தது. இதில், சிக்கி சுமாா் 100 மீட்டா் தொலைவு வரை இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயமடைந்த அவா் பரிதாபமாக உயிரிழந்தாா்.

சிதம்பரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் விஜி லாரியை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.