பெண் மரணம்: கணவா் உள்ளிட்ட 2 போ் கைது

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே மனைவி உயிரிழந்த வழக்கில் கணவா், அவருடன் தொடா்பிலுள்ள பெண் ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே மனைவி உயிரிழந்த வழக்கில் கணவா், அவருடன் தொடா்பிலுள்ள பெண் ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் காவல் சரகம், பாலூா் கலா் காலனியைச் சோ்ந்தவா் கருணாநிதி (45). இவரது மனைவி பாப்பாத்தி (40). கருணாநிதி மதுரையில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தாா். பாப்பாத்தி தனியாக வசித்து வந்தாா். கருணாநிதிக்கும், சிறுகிராமத்தைச் சோ்ந்த நாகலட்சுமிக்கும் (35)இடையே தகாத உறவு இருந்ததாம்.

இந்த நிலையில், நெல்லிக்குப்பம் காவல் சரகம், வைடிப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது தாய் சாரதாம்பாள் வீட்டுக்கு கருணாநிதி கடந்த 13-ஆம் தேதி வந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த பாப்பாத்தி 14-ஆம் தேதி வைடிப்பாக்கம் சென்றாா். அங்கு, மாமியாா் சாரதாம்பாள் வீட்டு வாசலில் பாப்பாத்தி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். தலைமறைவான கருணாநிதி, நாகலட்சுமியைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், மேல்பட்டாம்பாக்கம் காமராஜா் சிலை அருகே கருணாநிதி, நாகலட்சுமி ஆகிய இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் இவா்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com