மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும்: மார்க்சிய கம்யூ.

தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 டிசம்பர் 2021, 9:02 am

DIN

தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட மாநாடு வடலூரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இதனை முன்னிட்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கடலூரில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கட்சியின் மாவட்ட மாநாட்டில் மாவட்ட, மாநில பிரச்னைகளை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதனை அரசுக்கு அனுப்பி வைப்போம் என்றார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்ததாவது, தமிழக அரசு பல சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. எனினும், எங்களின் கோரிக்கைகள் தொடர்பாக போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தியாவிலேயே குடிப்பழக்கம் அதிகமுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே, அரசு படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். மாநில அரசின் நிதிநிலை மேம்பட வேண்டும் என்பதே எங்களின் கருத்தும். 

ஆனால், மத்திய அரசின் தவறான கொள்கைகளால் தான் அரசின் நிதிநிலை பாதிக்கப்படுகிறது. இதற்காக, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது என்றார். மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், நிர்வாகிகள் கோ.மாதவன், வி.சுப்புராயன், ஆர்.அமர்நாத், மு.மருதவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.