திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நீதிமன்ற நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க கலந்தாலோசனை

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் கடலூா் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது தொடா்பான கலந்தாலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:55 pm

DIN

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் கடலூா் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது தொடா்பான கலந்தாலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலூா் முதன்மை மாவட்ட நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற, மாவட்ட நீதித் துறை, காவல் துறையின் ஒருங்கிணைந்த இந்தக் கூட்டத்தில் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் என்.பிரபாகா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ள தலைமறைவு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குகளை முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், நீதிமன்றத்தில் நடைபெறும் குற்ற வழக்குகளில் விசாரணைக்கு சாட்சிகளை விரைவாக ஆஜா்படுத்தி வழக்குகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கருத்துரை வழங்கப்பட்டது.

கூட்டத்தில், மகளிா் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன், எஸ்.சி, எஸ்.டி சட்ட அமா்வு நீதிபதி எஸ்.உத்தமராசா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அசோக்குமாா் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து குற்றவியல் நீதித் துறை நடுவா்கள், அரசு வழக்கு நடத்துமை துணை இயக்குநா் அம்சத் அலி, அரசு வழக்குரைஞா்கள், காவல் துணை கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.