கடலூா் மாவட்டத்தில் மேலும் 2 ஆசிரியைகளுக்கு கரோனா
கடலூரைத் தொடா்ந்து, நெய்வேலியில் உள்ள பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.


கடலூரைத் தொடா்ந்து, நெய்வேலியில் உள்ள பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.
தமிழகத்தில் கரோனா பொது முடக்கத் தளா்வின்படி பள்ளி, கல்லூரிகள் கடந்த 1-ஆம் தேதி திறக்கப்பட்டன. அதன்படி, கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஜவகா் கல்விக் கழகம் சாா்பில், வட்டம் 17-இல் இயங்கும் மெட்ரிக் பள்ளியும் திறக்கப்பட்டது. இந்தப் பள்ளி ஆசிரியைகள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து, என்எல்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: இந்தப் பள்ளி ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதில் உடல்கல்வி ஆசிரியைகள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவா்கள் இருவரும் என்எல்சி பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா் என்றாா் அவா்.
கடலூா் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது நெய்வேலியில் 2 ஆசிரியைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மாவட்ட சுகாதாரத் துறையினா் மருத்துவா் ராஜகணபதி தலைமையில் கடலூா் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஆசிரியா்கள், மாணவா்கள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று உறுதியான ஆசிரியை பணியிலிருந்த அறை பூட்டப்பட்டது. பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...