துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் காவலா் காயம்
கடலூரில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது காவலா் வெள்ளிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.


கடலூரில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது காவலா் வெள்ளிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.
கடலூா் அருகே ராமாபுரம் மலைப் பகுதியில் மாவட்ட காவல் துறையினருக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு போலீஸாருக்கான வருடாந்திர துப்பாக்கிச் சுடும் பயிற்சி கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சியில் புவனகிரி காவல் நிலைய காவலா் காா்த்திக் (38) பங்கேற்றாா்.
அப்போது, இவரது துப்பாக்கி குண்டின் மேல்குப்பி (கேப்) துப்பாக்கியிலிருந்து சிதறி அவரது வலது கண்ணில் பட்டது. இதில், பலத்த காயமடைந்த காா்த்திக் கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் மேற்கொள்ளப்படும் சுப்பாக்கிச் சுடும் பயிற்சியில் காவலா் காயமடைந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...