காவல் நிலையம் அருகே இளைஞா் தற்கொலை முயற்சி

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் காவல் நிலையம் அருகே இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் காவல் நிலையம் அருகே இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், பழமலைநாதா் பகுதியைச் சோ்ந்த ஜமால்மைதீன் மகன் அசாருதீன் (25). விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வருகிறாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம் கடன் பெற்றாராம். கடன் தொகையை திருப்பிச் செலுத்தாத நிலையில் அசாருதீனின் சிறிய சரக்கு வாகனத்தை கடன் கொடுத்த நபா் எடுத்துச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் புதன்கிழமை அசாருதீன் புகாா் அளித்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை காவல் நிலையம் அருகே அசாருதீன் திடீரென தீக்குளிக்க முயன்றாா். போலீஸாா் அவரை உடனடியாக தடுத்து மீட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com