கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வாகனத்தில் அடிபட்ட மயில் உயிரிழந்தது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூரை அடுத்த சேப்பாக்கம் மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆண் மயில் அடிபட்டு வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தது. அந்த வழியாக காரில் வந்த புதுச்சேரியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் விமல், மயிலின் உடலை மீட்டு வேப்பூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
போலீஸாா் மயிலின் உடலை விருத்தாசலம் வனக் காவலா் ஆறுமுகத்திடம் ஒப்படைத்தனா்.