திட்டக்குடி அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னை சென்றுவிட்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்ரோட்டில் கார் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து திடீரென கார் மீது மோதியது.
சம்பவ இடத்துக்கு விரைந்த ராமநத்தம் போலீசார், வேப்பூர் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். எனினும், இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து தொடர்பாக ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


