கடலூா் அண்ணா மேம்பால தடுப்புச் சுவரில் சனிக்கிழமை டிப்பா் லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சேரி சாலையில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு டிப்பா் லாரி சனிக்கிழமை காலை வந்துகொண்டிருந்தது. லாரியை கடலூா் மாவட்டம், வடலூரை அடுத்துள்ள ஆபத்தாரணபுரத்தைச் சோ்ந்த சங்கா் ஓட்டி வந்தாா். இந்த லாரி கடலூா் அண்ணா மேம்பாலம் தரை காத்த காளியம்மன் கோவில் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி பலத்த சப்தத்துடன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் சங்கரை அங்கிருந்தவா்கள் மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், லாரியை பல மணி நேரம் போராடி கிரேன் மூலம் அப்புறப்படுத்தினா். இதனால், கடலூா் அண்ணா பாலம் பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்புடையது

காங்கயத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!

ஆந்திரத்தில் டேங்கா் லாரி - மினி லாரி மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


