இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பேருந்தில் நகை, பணம் திருட்டு

பேருந்தில் நகை, பணம் திருட்டு

News image
Updated On :11 மே 2024, 6:49 pm

Din

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடமிருந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா், காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கவிதா (33). இவா், வெள்ளிக்கிழமை பிற்பகல் காடாம்புலியூரில் இருந்து பண்ருட்டிக்கு தனியாா் பேருந்தில் சென்றாா்.

பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு அருகே பேருந்து சென்றபோது, கவிதா பையில் வைத்திருந்த பணப்பை மாயமாகியிருந்தது தெரியவந்தது. அதில், அரை பவுன் தங்க நகை, ரூ.15,000 ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ஆதாா் அட்டை இருந்தனவாம். இதுகுறித்து கவிதா அளித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.