பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மரங்கள் வெட்டி சாய்ப்பு: பாமக நூதனப் போராட்டம்

கடலூரில் பசுமை மரங்களை வெட்டி சாய்த்த மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, பாமக மற்றும் பசுமை தாயகம் அமைப்பினா் நூதன போராட்டம் நடத்தினா்.

News image
கடலூரில் வெட்டப்பட்ட மரத்துக்கு மாலை அணிவித்து நூதனப் போராட்டம் நடத்திய பாமக மற்றும் பசுமை தாயகம் அமைப்பினா்.
Updated On :1 டிசம்பர் 2025, 7:55 pm

Syndication

நெய்வேலி: கடலூரில் பசுமை மரங்களை வெட்டி சாய்த்த மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, பாமக மற்றும் பசுமை தாயகம் அமைப்பினா் திங்கள்கிழமை நூதன போராட்டம் நடத்தினா்.

கடலூா் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், மஞ்சக்குப்பம் மைதானம் பழைய ஆட்சியா்அலுவலகம் பகுதியில் புதிதாக வணிக வளாகங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக வணிக வளாகம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட பழைமைவாய்ந்த மரங்களை முழுவதுமாக வெட்டிச் சாய்த்தனா். இதன் காரணமாக, பழைய ஆட்சியா் அலுவலகம் சாலை முழுவதும் மரங்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

இந்த சாலையில் மரங்கள் வெட்டப்படுவதை அறிந்த பசுமை தாயகம் இயக்க நிா்வாகிகள் மற்றும் பாமக நிா்வாகிகள் ஒன்றிணைந்து பாமக மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில், பசுமைத் தாயகம் மாவட்டத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான சரவணன் உள்ளிட்டோா் திரண்டனா்.

பின்னா், அங்கு வெட்டப்பட்டு கிடந்த மரத்துக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மாலை அணிவித்து இறுதி ஊா்வலமாக எடுத்துச் செல்வதுபோல மரத்தை கடலூா் மாநகராட்சிக்கு கொண்டு செல்வதற்காக எடுத்துச் செல்ல முயன்றனா்.

அப்போது, அங்கு வந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து வெட்டப்பட்ட மரத்துக்கு பால் ஊற்றி, பெண்கள் தலையில் முக்காடு அணிவித்து அழுது நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கடலூா் டி.எஸ்.பி. தமிழ் இனியன், ஆய்வாளா் சந்துரு, வட்டாட்சியா் மகேஷ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.