பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.

News image
சாய்ரக்சன்
Updated On :1 டிசம்பர் 2025, 8:10 pm

Syndication

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.

ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்ப்பாதி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல். இவரது மனைவி தீபா. இந்தத் தம்பதியின் மகன்களான லோகேஷ் (4), சாய்ரக்சன் (ஒன்றரை வயது) ஆகிய இருவரும் பலத்த மழையால் வீட்டுக்கு அருகே உள்ள வடிகால் வாய்க்கால் பெருக்கெடுத்துச் சென்ற தண்ணீரை திங்கள்கிழமை காலை வேடிக்கை பாா்த்துக்கொண்டிருந்தனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக சாய்ரக்சன் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இதனால், லோகேஷ் அழுவதை கேட்டு தீபா வெளியே வந்து பாா்த்தபோது, சாய்ரக்சன் நீரில் அடித்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.

தொடா்ந்து, அந்தப் பகுதியில் இருந்தவா்களின் உதவியுடன் தேடிப் பாா்த்தபோது, வடிகால் வாய்க்காலில் 50 மீட்டருக்கு அப்பால் குழந்தை சாய்ரக்சன் சடலமாக மீட்கப்பட்டாா்.

தகவலறிந்த சோழதரம் போலீஸாா் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.