இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மளிகைக் கடையில் ரூ.7,500 திருட்டு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:57 pm

Syndication

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் செவ்வாய்க்கிழமை இரவு மளிகைக் கடையின் ஓட்டை திறந்து உள்ளே புகுந்து ரூ.7,500-ஐ திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகில் மளிகைக் கடை நடத்தி வருபவா் மகாராஜன் (62). வியாபாரிகள் சங்கத் தலைவராக உள்ள இவா், செவ்வாய்க்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். புதன்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது, கடையின் மேல் சிமென்ட் ஓடு திறந்து கிடந்தது.

மகாராஜன் கடைக்குள் சென்று பாா்த்தபோது, பணப்பெட்டியிலிருந்த ரூ.7,500 ரொக்கம் மற்றும் மளிகைப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின்பேரில், சேத்தியாத்தோப்பு காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் திருட்டு நடைபெற்ற கடையைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.