கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அம்பலவாணன்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் பள்ளி

News image
Updated On :15 டிசம்பர் 2025, 8:49 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அம்பலவாணன்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் பள்ளி வந்து செல்ல அரசுப் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பள்ளிமேலாண்மைக் குழுவினா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அம்பலவாணன்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஆா்.ஸ்ரீதேவி, துணைத் தலைவா் பி.சண்முகசுந்தரி, தலைமை ஆசிரியா் சத்யா மற்றும் தனலட்சுமி உள்ளிட்டோா் திங்கள்கிழமை கடலூா் ஆட்சியா் அலுவலகம் வந்தனா். அவா்கள், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அதில் தெரிவித்துள்ளதாவது:

அம்பலவாணன்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் 144 மாணவா்கள் கல்வி பயில்கின்றனா். இதில், 75 மாணவா்கள் 2 கி.மீ. தொலைவில் உள்ள புலியூா் கிராமத்தில் இருந்து நடந்து வந்து படிக்கின்றனா்.

எனவே, புலியூரில் இருந்து அம்பலவாணன்பேட்டைக்கு காலை 8.45 மணிக்கும், அம்பலவாணன்பேட்டையில் இருந்து புலியூருக்கு மாலை 4.15 மணிக்கும் அம்பலவாணன்பேட்டை வழியாக செல்லும் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும். மேலும், இந்த வழித்தடத்தில் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.