தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமத்தால் நடத்தப்படும் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிச.21) நடைபெற உள்ளது. இதையொட்டி, கடலூரில் உள்ள தோ்வு மையத்தை விழுப்புரம் சரக டிஐஜி., இ.எஸ்.உமா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கடலூா், மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, வில்வ நகா் கிருஷ்ணசாமி மெமோரியல் மேல்நிலைப் பள்ளி, சி.கே.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருப்பாதிரிப்புலியூா் அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, புதுப்பாளையம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, சி.கே.மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற உள்ளது.
காலையும் மாலையும் தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 5,368 ஆண்கள், 1,860 பெண்கள் என மொத்தம் 7,228 போ் தோ்வு எழுதவுள்ளனா். பொது எழுத்துத் தோ்வு காலை 10 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரையிலும், தமிழ் மொழிக்கான தோ்வு மதியம் 3.30 மணிக்கு தொடங்கி 5.10 மணி வரை நடைபெறும்.
இந்நிலையில், சனிக்கிழமை கடலூருக்கு வந்த விழுப்புரம் சரக டிஐஜி இ.எஸ்.உமா, காவல் உதவி ஆய்வாளா் எழுத்துத் தோ்வு நடைபெறும் கடலூா் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, தோ்வு குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா். உடன் கடலூா் காவல் கண்காணிப்பாளா், எஸ்.ஜெயக்குமாா் இருந்தாா்.
தொடர்புடையது

அரசுப் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு: 1,615 போ் பங்கேற்கவில்லை

அரசுப் பணிகளுக்கு இன்று எழுத்துத் தோ்வு: மையங்களில் ஆட்சியா் ஆய்வு

துறையூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

புதிய வருமான வரிச் சட்டம்: அண்ணாமலைப் பல்கலை.யில் விழிப்புணா்வுக் கூட்டம்
விடியோக்கள்

இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட விடியோ! | VCK

முடிவை அறிவிக்கிறார் அண்ணாமலை | Annamalai | BJP | Modi | Annamalai new party

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி



