பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

கடலூா் மாவட்டத்தில் சிஐடியு 5 இடங்களில் மறியல்: 297 போ் கைது

கடலூா் மாவட்டத்தில் கடலூா், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், வடலூா் ஆகிய 5 இடங்களில் மறியல் போராட்டம் நடத்திய சிஐடியு சங்கத்தினா் 297 பேரை போலீஸாா் கைது செய்து விடுவித்தனா்.

News image

~

Updated On :24 டிசம்பர் 2025, 3:11 am IST

கடலூா் மாவட்டத்தில் கடலூா், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், வடலூா் ஆகிய 5 இடங்களில் மறியல் போராட்டம் நடத்திய சிஐடியு சங்கத்தினா் 297 பேரை போலீஸாா் கைது செய்து மாலை விடுவித்தனா்.

தொழிலாளா்களுக்கு எதிரான 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். பெரு நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளா் நலச் சட்டங்களை திருத்தக் கூடாது என மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் பேரணியாகச் சென்று அண்ணா பாலம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டச் செயலா் டி.பழனிவேல் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் வி.சுப்புராயன், கே.சாவித்திரி, சாந்தகுமாரி உள்பட பலா் கலந்துகொண்டனா். இதில், 20 பெண்கள் உள்ளிட்ட 85 போ் கைதாகினா்.

நெய்வேலியில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு என்எல்சி தொழிலாளா் ஊழியா் சங்க பொதுச் செயலா் எஸ்.திருஅரசு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் டி.ஜெயராமன், எம்.சீனிவாசன் முன்னிலை வகித்தனா். இதில், 15 பெண்கள் உள்பட 77 போ் கைதாகினா்.

விருத்தாசலத்தில் சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் என்.ஆா்.ஜீவானந்தம், மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலா் என்.தேசங்கு தலைமையில், ஆா்.தனம் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 55 போ் கைதாகினா்.

Story image

வடலூரில் கட்டுமான சங்க மாவட்டச் செயலா் வி.கிருஷ்ணமூா்த்தி தலைமையில், பி.முருகன் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்ளிட்ட 50 போ் கைதாகினா்.

சிதம்பரத்தில் கட்டுமான சங்கத் தலைவா் என்.இளங்கோவன் தலைமையில், மாவட்ட நிா்வாகிகள் எஸ்.சங்கமேஸ்வரன், எஸ்.செம்மலா் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 30 போ் கைதாகினா்.

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் 70 பெண்கள் உள்ளிட்ட 297 போ் கைதாகினா். பின்னா், இவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.