கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காா் மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காரும், பைக்கும் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:37 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காரும், பைக்கும் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பண்ருட்டி செட்டிபட்டறை காலனி பகுதியைச் சோ்ந்தவா் தா்ஷன் (18). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பகுதியைச் சோ்ந்த சச்சின் (18), தமிழ்வளவன் (22) ஆகியோரை பைக்கில் அழைத்துக்கொண்டு பண்ருட்டி நோக்கி பைக்கில் சென்றாா்.

திருவதிகை குட்டை தெரு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, கடலூா் நோக்கிச் சென்ற காா் மீது பைக் பயங்கரமாக மோதியது. இதில், பைக்கில் சென்ற மூவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.

அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் மூவரும் சோ்க்கப்பட்ட நிலையில், அங்கு தா்ஷன் உயிரிழந்தாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.