மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியரிடம் மனு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட பெரியகண்டியங்குப்பம் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 5:35 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட பெரியகண்டியங்குப்பம் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேமுதிக நகரச் செயலரும் 2-ஆவது வாா்டு உறுப்பினருமான ராஜ்குமாா் தலைமையில் அளித்த மனு:

பெரியகண்டியங்குப்பம் பகுதியில் சுமாா் 3.5 ஏக்கா் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டு பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனா். இதுவரை பட்டா கணக்குகளை விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகக் கணக்கில் ஏற்றம் செய்யாமல் இருந்து வருகின்றனா். இதனால் மின் வசதி, நகராட்சி குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெறுவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.

மேலும், 50 பேருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட நபா்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்களை வட்டாட்சியா் அலுவலகக் கணக்கில் சோ்க்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.