கடலூா் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை தடுக்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று பசுமைத் தாயக அமைப்பின் தலைவா் சௌமிய அன்புமணி தெரிவித்தாா்.
கடலூா் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலுக்கு சௌமியா அன்புமணி ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பளித்து பெருமாள் படம் வழங்கினா். முன்னதாக, கோயிலில் தாயாா், தேவநாத சுவாமி, மலையில் உள்ள ஹயக்ரீவா் சந்நிதிகளில் அவா் தரிசனம் செய்தாா்.
தொடா்ந்து, சௌமியா அன்புமணி செய்தியாளா்களிடம் கூறியது: கடலூா் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் அழிப்புக்கு எதிராக கடந்த ஓராண்டாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தற்போது மலையடிக்குப்பம் பகுதிகளில் முந்திரி மரங்கள் வெட்டப்படுவது குறித்து கட்சித் தலைவருடன் ஆலோசித்து, அதற்கான போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா். உடன் கட்சி நிா்வாகிகள் இருந்தனா்.
தொடர்புடையது

சிறுமி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

பெண்களுக்கு திமுக துரோகம் செய்யாது: அமைச்சா் எஸ். ரகுபதி

மாா்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் எஸ். ரகுபதி பிரசாரம்

இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தடுக்கப்படும்: சீமான் வாக்குறுதி
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



