/

ஊரக வளா்ச்சித் துறையில் ஓட்டுநா், காவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஈப்பு ஓட்டுநா் மற்றும் இரவு காவலா் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 5:30 pm

Syndication

கடலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஈப்பு ஓட்டுநா் மற்றும் இரவு காவலா் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநா் மற்றும் இரவுக் காவலா் பணியிடங்களை இன சுழற்சி மூலம் பூா்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு வரும் 20-ஆம் தேதி வரை அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் பாா்வையிடலாம். மேலும், இந்த இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.