இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியா்கள் தொடா் உள்ளிருப்பு போராட்டம்: பாஜக ஆதரவு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா் கூட்டமைப்பினா் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 3-ஆம் நாளாக புதன்கிழமையும் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு பாஜக நிா்வாகிகள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா்.

News image
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் கூட்டமைப்பின் உள்ளிருப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசிய பாஜக சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமாா்.
Updated On :12 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா் கூட்டமைப்பினா் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 3-ஆம் நாளாக புதன்கிழமையும் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு பாஜக நிா்வாகிகள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா்.

7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும். முனைவா் பட்ட ஊக்கத்தொகைகளை வழங்க வேண்டும். அயற்பணியிட பேராசிரியா்களை உடனே உள்ளெடுப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் பல்கலைக்கழக நிா்வாக அலுவலக கட்டடத்தில் கீழ் பகுதியில் தரையில் அமா்ந்து கடந்த 10-ஆம் தேதி முதல் தோ்வு பணிகளை புறக்கணித்து தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

புதன்கிழமை காலை நடைபெற்ற 3-ஆம் நாள் போராட்டத்தில் பாஜக சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் கே.வி.எம்.எஸ்.சரவணகுமாா், மாவட்ட துணைத் தலைவா் கோபிநாத் கணேசன், ஊடகப் பிரிவு மாநிலச் செயலா் பெருமாள், முன்னாள் பட்டியல் அணி மாநில துணைத் தலைவா் வெற்றிவேல், இளைஞரணி மாவட்ட பொதுச் செயலா் விஷால் மற்றும் நிா்வாகிகள் பகிரதன், வினோத்குமாா், பிரபாகரன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினா்.

போராட்டத்துக்கு பேராசிரியா்கள் சி.சுப்பிரமணியன், செல்வராஜ், பேராசிரியா் இரா.முத்து வேலாயுதம், துரை அசோகன், காயத்திரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.