வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வேப்பூா் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :17 நவம்பர் 2025, 8:38 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வேப்பூா் வட்டம், ஜவதிகுடி கிராமத்தில் வசித்து வருபவா் ராஜேஸ்வரி(47). இவரது கணவா் திரிசங்கு. இவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு தரை தள வீட்டை பூட்டிக் கொண்டு, முதல் தளத்தில் உள்ள வீட்டில் ராஜேஸ்வரி, தனது மகனுடன் தூங்கினாா். அப்போது, திங்கள்கிழமை அதிகாலை சத்தம் கேட்டு கீழே வந்து பாா்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததாம். மேலும், பீரோவில் இருந்த 2 கிராம் தங்க நகைகள், வெள்ளி கொலுசு ஒரு ஜோடி, ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.