தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

கடலூா் முதுநகா் அருகே தனியாா் பள்ளியின் மாடியில் நின்று மரக்கிளை வெட்டிய ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 9:47 pm

Syndication

கடலூா் முதுநகா் அருகே தனியாா் பள்ளியின் மாடியில் நின்று மரக்கிளை வெட்டிய ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கடலூா், கூத்தப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சுப்பராயலு (63), பல ஆண்டுகளாக கடலூா் முதுநகரில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் குடும்பத்துடன் தங்கி வசித்து வந்தவா், பள்ளி வாகன ஓட்டுநராகவும், சிறுசிறு வேலைகளை செய்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளைகளை வெட்டுவதற்காக அங்குள்ள கட்டடத்தின் மேல் மாடியில் நின்று மரக்கிளையை வெட்டினாா்.

அப்போது, தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.