காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே காா் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே காா் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

மந்தாரக்குப்பம் காவல்சரகம், ஏ.குறவன்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் செல்வராசு மகன் ராசு(32), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி தமிழரசி (26) மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா். புதன்கிழமை அதிகாலை சுமாா் 1 மணி அளவில் மந்தாரக்குப்பம் எம்.ஜி.ஆா் சிலை அருகே ராசு நடந்துச் சென்றாா்.

அப்போது, பின்னால், வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com