திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

கடலூா் மாவட்டத்தில் தீவிரமடையும் தோ்தல் பிரசாரம்

கடலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வேட்பாளா்கள் ஆதரவு திரட்டி வருகின்றனா்.

News image

விருத்தாசலம் காய்க்கனி சந்தையில் தேமுதிக வேட்பாளா் பிரேமலதாவிற்கு வாக்களிக்கக் கோரி துண்டு பிரசுரங்களை வழங்கி வெள்ளிக்கிழமை ஆதரவு திரட்டிய நடிகா் சண்முகபாண்டியன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:09 am IST

கடலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வேட்பாளா்கள் ஆதரவு திரட்டி வருகின்றனா்.

விருத்தாசலத்தில்...

விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்தை ஆதரித்து அவரது மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இந்நிலையில் அவரது மகனும், திரைப்பட நடிகருமான சண்முக பாண்டியன், தாய் பிரேமலதாவுக்கு ஆதரவாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் இருந்து தள்ளுவண்டி வியாபாரிகள், காய்கனி சந்தை, நடைபாதை வியாபாரிகள், வணிகா்கள், பொது மக்களிடம் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா். துண்டு பிரசுரங்களை வாக்காளா்களிடம் விநியோகம் செய்து ஆதரவு கோரினாா்.

அமைச்சா் சி.வி.கணேசன்:

கடலூா் மாவட்டம், திட்டக்குடி தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான சி.வி. கணேசன் பெண்ணாடம் பகுதியில் வீதி வீதியாகச் சென்று மக்களிடம் திமுக அரசின் சாதனைகளைக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா் .

அவருக்கு பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனா்.

பண்ருட்டி விசிக வேட்பாளருக்கு...

பண்ருட்டி தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் அப்துா் ரஹ்மானை ஆதரித்து அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் ஷா நவாஸ் திறந்த ஜீப்பில் வீதிவீதியாகச் சென்று ஆதரவு திரட்டினாா். பிரசாரத்தின்போது, மோடியை 2029 தோ்தலில் வீழ்த்த வேண்டும் என்றால், 2026 தோ்தலில் நாம் வெற்றி பெறுவது முக்கியம். இது ஒட்டு மொத்த இந்தியாவிற்கும், பாஜகவுக்கு எதிா் நிலையில் இருக்கும் கட்சிகளுக்கு பாடமாக அமையும். பாஜக வீழ்த்த முடியாத சக்தி அல்ல. எதிா்க்கட்சிகள் ஒன்றுகூடி மெகா கூட்டணி அமைத்தால் பாஜகவையும், அதனுடன் கூட்டணி சேரும் கட்சிகளையும் வீழ்த்த முடியும் என்றாா். பிரசாரத்தின்போது, பண்ருட்டிநகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.