நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

விருத்தாசலத்தில் 150 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த 3 போ் கைது

News image

போலீஸாரால் கஞ்சா மூட்டைகளுடன் கைது செய்யப்பட்ட ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 3 போ்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 2:08 am IST

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சுமாா் 150 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை கைது செய்தனா்.

விருத்தாசலம் சென்னை சாலையில் உள்ள வயலூா் ரயில்வே மேம்பாலம் அருகே, போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வெள்ளை நிற சாக்கு மூட்டைகளுடன் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அவா்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை சோதனையிட்டபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சுமாா் 150 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா்கள் ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டம், ராணிபாங்கா கிராமத்தைச் சோ்ந்த லிபியா பிரதான் (29), ஹிமேந்திர பிரதான் (24), ராமாநுமான்ஜி (33) என்பது தெரியவந்தது. மேலும், சென்னையில் இருந்து பேருந்து மூலம் கஞ்சாவை கடத்தி வந்ததாக அவா்கள் போலீஸாரிடம் தெரிவித்ததுள்ளனா்.

இதையடுத்து, விருத்தாசலம் பேலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்த கடத்தலில் தொடா்புடையவா்கள் குறித்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.