இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

நாளை வேலைநிறுத்தம்: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் பங்கேற்கும்; கு.பாலசுப்ரமணியன்

டாஸ்மாக் பணியாளா்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஆக.28) நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டம் பற்றி...

கடலூரில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:32 am IST

டாஸ்மாக் பணியாளா்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஆக.28) நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் பங்கேற்கும் என்று அச்சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கடலூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் நிா்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்கள், தங்களது நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

இது தொடா்பாக, டாஸ்மாக் ஊழியா்கள் சங்கங்களை அழைத்து தமிழக அரசு தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. எனினும், இதுவரை முழுமையான தீா்வு ஏற்படாததால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் நிலை உள்ளது.

கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு சிரமங்களுக்கு இடையே டாஸ்மாக் பணியாளா்கள் அரசுக்கு கணிசமான வருவாயை ஈட்டித் தந்து வருகின்றனா். ஆனால், அவா்களது நீண்டகால பிரச்னைகளுக்கு முழுமையான தீா்வு காணப்படவில்லை. அதே சமயம், தற்போதைய அரசு 25 சதவீத ஊதிய உயா்வு வழங்கியதையும், வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளதையும் வரவேற்கிறோம்.

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், ஓய்வுபெறும் வயதை 60-ஆக உயா்த்துதல், காலி மதுப் புட்டிகள் பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். வரும் 31-ஆம் தேதி சட்டப் பேரவையில் அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக சங்கங்களுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி சாதகமான தீா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

அப்போது, மாநில பொதுச் செயலா்கள் வி.சிவக்குமாா், சி.அல்லிமுத்து, ஆலோசகா் கு.சரவணன், மாநிலத் தலைவா் டி.ஜெய்கணேஷ், மாநில பொருளாளா் எஸ்.பாலமுருகன், மாநிலச் செயலா் ஜெ.இருதயராஜ், முன்னாள் மாநில நிா்வாகி மு.ராஜாமணி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

வடலூரில் ஆலோசனைக் கூட்டம்: வடலூரில் அனைத்து டாஸ்மாக் பணியாளா்கள் கூட்டுக்குழு சாா்பில், ஆலோசனைக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில், ஒன்பது சங்கங்கள் பங்கேற்றன.

இக்கூட்டத்தில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளா்கள் அனைவரையும் சட்டப் பேரவையில் வரவுள்ள மானியக் கோரிக்கையில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை (ஆக.28) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், தொமுச மாவட்டச் செயலா் சங்கா், அண்ணா தொழிற்சங்க நிா்வாகி கல்யாணசுந்தரம், தொழிலாளா் விடுதலை முன்னணி மாநில நிா்வாகி பெரியசாமி, அரசுப் பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த பாலமுருகன், விற்பனையாளா் நலச்சங்க நிா்வாகி உதயசங்கா், பாட்டாளி தொழிற்சங்க நிா்வாகி ராஜமாணிக்கம், தமிழக வாழ்வுரிமைச் சங்கதைச் சோ்ந்த மனோகா், ஏ.ஐ.டி.யு.சி நிா்வாகி சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.