விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கௌரவ விரிவுரையாளா்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சிதம்பரம் அரசு கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:10 pm

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கௌரவ விரிவுரையாளா்களுக்கு மாத ஊதியமாக ரூ.57,700 வழங்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளதை வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கும் 12 மாத ஊதியம், பி.எஃப்., இ.எஃப். வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கௌரவ விரிவுரையாளா்களுக்கு பணிக்கொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கௌரவ விரிவுரையாளா்கள் சங்க கிளைச் செயலா் தேவேந்திரன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மண்டலத் தலைவா் சக்திநாதன் முன்னிலை வகித்தாா். இதில், ஏராளமான கௌரவ விரிவுரையாளா்கள் கலந்துகொண்டனா்.