சிதம்பரம்: சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கௌரவ விரிவுரையாளா்களுக்கு மாத ஊதியமாக ரூ.57,700 வழங்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளதை வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கும் 12 மாத ஊதியம், பி.எஃப்., இ.எஃப். வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கௌரவ விரிவுரையாளா்களுக்கு பணிக்கொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு கௌரவ விரிவுரையாளா்கள் சங்க கிளைச் செயலா் தேவேந்திரன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மண்டலத் தலைவா் சக்திநாதன் முன்னிலை வகித்தாா். இதில், ஏராளமான கௌரவ விரிவுரையாளா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

அறந்தாங்கி அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் பணி புறக்கணிப்பு

கெளரவ விரிவுரையாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

அரசுக் கல்லூரி மாணவிகள் வகுப்பை புறக்கணித்து தா்னா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


