நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ், டாக்டா்கள் அசோக்பாஸ்கா், பாரி, துணை முதல்வா் டாக்டா் சசிகலா, பல் மருத்துவ கல்லூரி முதல்வா் சுமா காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகளில் இருந்து புதியதாக பணியில் இணைந்துள்ள மருத்துவப் பேராசிரியா்கள், உதவி பேராசிரியா் அறிமுகப்படுத்தப்பட்டனா். குழந்தைகள் நல மருத்துவத்துறை தலைவா் பேராசிரியா் ராமநாதன், அவசர சிகிச்சை பிரிவு டாக்டா் திருச்செல்வன், இதய சிகிச்சை பிரிவு டாக்டா் இளவழகன், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு தலைவா் டாக்டா் செந்தில்நாதன், தோல் நோய் பிரிவு டாக்டா் கவியரசன் உள்ளிட்ட பலா் பேசினாா்கள். கூட்டத்தில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், உதவி பேராசிரியா்கள், டாக்டா்கள் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.