தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நாளை தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

கடலூா் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் - 2026 புதன்கிழமை (ஜனவரி 21) நடைபெற உள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 7:21 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் - 2026 புதன்கிழமை (ஜனவரி 21) நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் தெரிவத்ததாவது: கடலூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் புதன்கிழமை காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

முகாமில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு 300-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநா் இடங்களை நிரப்ப உள்ளன.

பயிற்சிக்கு தகுதிக்கேற்ப மாதாந்திர உதவித்தொகையாக ரூ.6,500 முதல் ரூ.12,300 வரை நிறுவனத்தால் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் கைப்பேசி 9499055861, 9994396444 எண்ணினை தொடா்பு கொள்ளலாம்.