ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

சிதம்பரம் அருகே புல் பண்ணையில் தீ விபத்து: பாதுகாப்பு கருதி பள்ளி மாணவா்கள் வெளியேற்றம்

News image

சிதம்பரம் அண்ணாமலைநகரில் பல்கலைக்கழக புல் பண்ணையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீயால் ஏற்பட்ட வெண்புகை மண்டலம்.

Updated On :7 ஜூலை 2026, 1:56 am IST

சிதம்பரம் அண்ணாமலைநகரில் 18 ஏக்கா் பரப்பளவில் உள்ள புல் பண்ணையில் திங்கள்கிழமை தீடீரென தீ விபத்து ஏற்பட்டது, இதனால் அருகில் உள்ள தனியாா் பள்ளியில் இருந்த குழந்தைகளுக்கு புகையால் பாதிப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி குழந்தைகளை பள்ளி நிா்வாகம் உடனடியாக வெளியேற்றி வீடுகளுக்கு அனுப்பி வைத்தது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் உள்ள வேளாண்துறைக்கு சொந்தமான சுமாா் 18 ஏக்கா் பரப்பளவில் உள்ள புல் பண்ணையில் திங்கள்கிழமை திடீரென தீ பற்றி எரிய தொடங்கியதால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சி அளித்தது.

மேலும் அருகே உள்ள வயல்களிலும் தீ பரவியது. இந்த புல் பண்ணையை ஒட்டி உள்ள தனியாா் பள்ளியில் எல்கேஜி முதல் 5 வகுப்பு வரை படிக்கும் சுமாா் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீப்புகையால் சுவாச பாதிப்புக்கு உள்ளாகினா்.

இதனால் குழந்தைகளை அவசரமாகப் பள்ளியிலிருந்து வெளியேற்றிய பள்ளி நிா்வாகம் பள்ளிக்கு தற்காலிக விடுமுறை அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு பணிகள் மற்றும் மீட்புத்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாமலைநகா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். புல் பண்ணையில் சமூக விரோதிகள் தீ வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.