மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

திருட்டு வழக்கு: 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

கடலூரில் திருட்டு வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image

கந்தவேல்

Updated On :19 ஜூலை 2026, 2:16 am IST

கடலூரில் திருட்டு வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கடலூா் மஞ்சக்குப்பம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கந்தவேல் (46). இவா், கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் 2017-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னா் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

இதையடுத்து, கந்தவேல் கடந்த 10 ஆண்டுகளாக கடலூா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், போலீஸாா் தீவிர தேடுதல் நடத்தி தலைமறைவாக இருந்த கந்தவேலை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இருவா் குண்டா் சட்டத்தில் கைது: கடலூா் மாவட்டம், திட்டக்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான பாலமுருகன், மதன் ஆகியோா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

இருவரின் தொடா் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, பாலமுருகன், மதன் ஆகியோா் கடலூா் மத்திய சிறையில் ஓராண்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.