ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

பொறியியல் பணிகள் எதிரொலி: கடலூா் - மைசூரு விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 1:27 am IST

திருச்சி ரயில்வே கோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு, சில ரயில்களின் இயக்க முறையில் தெற்கு ரயில்வே தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரயில் எண் 16231 கடலூா் துறைமுகம் - மைசூரு விரைவு ரயில், ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கடலூா் துறைமுக நிலையத்தில் இருந்து புறப்படும் சேவை மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

இந்த ரயில் வழக்கமான பாதைக்கு பதிலாக காா்மேலாரம் - பையப்பனஹள்ளி கேபின் - பனஸ்வாடி - யஷ்வந்த்பூா் கேபின் - சிக் பனவாா் - ஹாசன் வழியாக இயக்கப்படும்.

இதன் காரணமாக, பெங்களூா் கிழக்கு, பெங்களூா் கண்டோன்மெண்ட், கே.எஸ்.ஆா். பெங்களூா், கெங்கேரி மற்றும் மாண்டியா ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்காது.

பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறும், ரயில் இயக்கம் தொடா்பான கூடுதல் தகவல்களை அருகிலுள்ள ரயில் நிலையங்கள், தேசிய ரயில்வே விசாரணை சேவை 139 அல்லது இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூா்வ இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி மூலம் அறிந்து கொள்ளுமாறும் தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.