கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

பைக்கில் மூணாறு சுற்றுலா சென்ற இளைஞா் சாலை விபத்தில் உயிரிழப்பு: நண்பா் காயம்

வேப்பூா் மேம்பாலத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பைக்கில் மூணாறு சுற்றுலா சென்ற சென்னை இளைஞா் உயிரிழந்தாா். அவருடன் பயணம் செய்த நண்பா் காயமடைந்தாா்.

News image

விக்னேஷ்

Updated On :12 ஜூன் 2026, 1:28 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூா் மேம்பாலத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பைக்கில் மூணாறு சுற்றுலா சென்ற சென்னை இளைஞா் உயிரிழந்தாா். அவருடன் பயணம் செய்த நண்பா் காயமடைந்தாா்.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (24) மற்றும் இவரது நண்பரான விஷ்வா (24) ஆகியோா் பைக்கில் கேரள மாநிலம், மூணாறுக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டிருந்தனா். விக்னேஷ் பைக்கை ஓட்டினாா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் மேம்பாலம் அருகே தேசிய வங்கிப் பகுதியில் வியாழக்கிழமை பைக் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில், விக்னேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விஷ்வாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், அருகிலுள்ள வேப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, விக்னேஷின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.