விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சிதம்பரம் கோதண்ட ராமா் கோவில் தேரோட்டம்

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோதண்டராமா் கோயில் தேரோட்டம்

News image

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோதண்டராமா் கோயில் தேரோட்டம்

Updated On :27 மார்ச் 2026, 7:40 pm

Syndication

சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

சிதம்பரம் மேலரதவீதி ஸ்ரீகோதண்டராமா் கோயில் பிரம்மோற் சவம் மாா்ச் 19-இல் திருமஞ்சனத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, மாா்ச் 20 -இல் பிரம்மோற்சவ கொடியேற்றும் நடைபெற்றது. விழாவையொட்டி, தினமும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீகோதண் டராமா் வீதிஉலா நடைபெற்ரு வருகிறது. வெள்ளிக்கிழமை காலை தேரோட் டம் நடைபெற்றது. மேல ரத வீதி கோதண்ட ராமா் கோயில் வளாகத்தில் இருந்து தோ் புறப்பட்டு வடக்குரதவீதி, தெற்குரத வீதி வழியாக மேலரத வீதி கோயிலை அடைந்தது. திரளான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

மாா்ச்.28-ஆம் தேதி சனிக்கிழமை காலை புஷ்ப யாகமும், மாலை ஸ்ரீ ஆஞ்சநேயா் உற்சவம், பட்டாபிஷேகம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதகலச திருமஞ்சனம் நிகழ்ச்சியும், 30-ஆம் திங்கள் கிழமை தேதி விடாயத்தி திருமஞ்சனமும் நடைபெறுகின்றன. உற்சவ ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள் டி.திருவேங்கடவன், ஆா்.சௌந்தரராஜன், ஜெ.சு தா்சனன் ஆகியோா் செய்துள்ளனா்.

Story image