/
மங்கலம்பேட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம் மங்கலம்பேட்டை காவல் சாா்பு- ஆய்வாளா் அருணகிரி தலைமையில் போலீஸாா், வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது கா்ணத்தம் பிரதான சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
அப்போது அவா், விருத்தாசலம் அருகே கோணங்குப்பம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பாலமுருகன்(32) என்பதும், அவா் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மங்கலம்பேட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தனா். அவரிடம் இருந்து 305 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பான போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

3 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
ஆலங்குளத்தில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

கஞ்சா, போதை சாக்லெட் பதுக்கல்: இளைஞா் கைது
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


