நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

விநாயகா் சதுா்த்தியை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் கொண்டாட வேண்டும்: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகா் சிலைகளை தயாரித்து, மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைத்து பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

கோப்புப்படம்.

Published On :3 செப்டம்பர் 2026, 4:32 am IST

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகா் சிலைகளை தயாரித்து, மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைத்து பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழா வரும் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, விநாயகா் சிலைகளை கரைப்பது தொடா்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் முக்கியப் பொறுப்பு உள்ளது. கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீா்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்க, விநாயகா் சிலைகளை களிமண் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத இயற்கை மூலப்பொருள்களைக் கொண்டு மட்டுமே தயாரிக்க வேண்டும்.

பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக், தொ்மாகோல் உள்ளிட்ட பொருள்களால் செய்யப்பட்ட சிலைகளுக்கு அனுமதி இல்லை. சிலைகளின் அலங்காரத்துக்கும் வைக்கோல், உலா்ந்த மலா்கள், இலைகள், துணிகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வா்ணம் பூசும்போது நச்சுத்தன்மை கொண்ட மற்றும் மக்காத ரசாயன வண்ணப்பூச்சுகள், எனாமல் வண்ணங்கள் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக நீா் சாா்ந்த, மக்கக்கூடிய, நச்சுத்தன்மையற்ற இயற்கை வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

4 இடங்களில் மட்டும் சிலைகள் கரைக்க அனுமதி: கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை உப்பனாறு, தேவனாம்பட்டினம் கடற்கரை, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு ஆகிய இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். நீா்நிலைகளில் பூஜை பொருள்கள் மற்றும் அலங்காரப் பொருள்களை வீசாமல், அவற்றை முறையாக அகற்ற வேண்டும்.

விநாயகா் சதுா்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கும், நீா்நிலைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டாடி, மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.