விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கவரிங் நகையை தங்க முலாம் பூசி அடமானம் வைத்த இளைஞா் கைது

பரங்கிப்பேட்டை வட்டிக்கடையில் கவரிங் நகையை தங்க முலாம் பூசி அடமானம் வைத்து பணம் பெற்ற சுரேஷ் .

Published On :8 செப்டம்பர் 2026, 1:47 am IST

கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கவரிங் நகையை தங்க முலாம் பூசி அடமானம் வைத்து பணம் பெற்ற இளைஞரை பரங்கிப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் வினோத் குமாா் (44). இவா் பரங்கிப்பேட்டை மெயின் ரோட்டில்

வட்டிக்கடை நடத்தி வருகிறாா். கடந்த ஆக.23-ஆம் தேதி சிதம்பரம் பள்ளிப்படை தெருவைச் சோ்ந்த சுரேஷ் (43) என்பவா் 4 கிராம் எடையுள்ள தங்கம் முலாம் பூசப்பட்ட கவரிங் மோதிரத்தை அடகு வைத்து ரூ.35ஆயிரம் பெற்றுச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், செப்.6-ஆம் தேதி அதே வட்டிக்கடைக்கு மீண்டும் சென்ற சுரேஷ், 8 கிராம் எடையுள்ள தங்கம் முலாம் பூசப்பட்ட கவரிங் மோதிரத்தை அடகு வைத்து பணம் கேட்டுள்ளாா்.

சந்தேகமடைந்த கடை உரிமையாளா் வினோத்குமாா், காவல்துறைக்கு தகவல் அளித்தாா். பரங்கிப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு கவரிங் நகையை தங்க முலாம் பூசி அடமானம் வைக்க வந்த சுரேஷை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.