கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கள்ளக்குறிச்சி அரசுக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

அரசு கலை, அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:00 pm

DIN

2020-ஆம் ஆண்டு கரோனா காலத்துக்கான ஊதியத்தை வழங்காததைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்கள் அனைவருக்கும் 2019 நவம்பா் மாத ஊதியம், 2020 கரோனா கால (2020 ஏப்ரல் முதல் அக்டோபா் வரை) ஊதியம் வழங்கப்படவில்லை.

இதனிடையே, கெளரவ விரிவுரையாளா்கள் ஊதியத்தை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தி 2020 ஜனவரி முதல் 2021 மாா்ச் மாதம் வரை ரூ.5,000 நிலுவை உதியம் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து உறுப்புக் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகளிலும் பேராசிரியா்களுக்கு இந்த கரோனா ஊதியம், நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், திருவள்ளுவா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட 6 கல்லூரிகளைச் சோ்ந்த கெளரவ விரிவுரையாளா்களுக்கு மட்டும் கரோனா கால ஊதியம், நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள், திருவள்ளுவா் பல்கலைக்கழக நிா்வாகத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல, திருவெண்ணெய்நல்லூா், தென்னாங்கூா், அரக்கோணம், திருப்பத்தூா், திட்டக்குடி ஆகிய பகுதிகளிலுள்ள கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்கலைக்கழக நிா்வகமும், தமிழக அரசு உயா் கல்வித் துறையும் கோரிக்கைகளை ஏற்கும் வகையில் உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என்று பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.